ரூ 1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறாதவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.. Kalaignar Magalir Urimai Thogai Reapply Details

Kalaignar Magalir Urimai Thogai Reapply Details : மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இன்று விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக விண்ணப்பிக்கும் நடைமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு 2 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாமல் வெறும் அறிவிப்பாக இருப்பதாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக அரசை விமர்சித்திருந்தன.

பெண்களும் இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என காத்திருந்தார்கள். மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திட்டத்தை செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி செயல்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் எல்லா பெண்களுக்கும் இந்த உரிமைத் தொகை வழங்கப்படவில்லை.

Kalaignar Magalir Urimai Thogai Reapply Details
Kalaignar Magalir Urimai Thogai Reapply Details

இதற்காக சில விதிகள் வைக்கப்பட்டன. அதாவது உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் வருமான வரி செலுத்தக் கூடாது, ஆண்டு வருமானம் ரூ 2.50 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது, அது போல் ஆண்டுக்கு 3600 யூனிட்கள் மின்கட்டணம் செலுத்தக் கூடாது. கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களை வைத்திருக்கக் கூடாது.

குறிப்பாக அவர்கள் அரசு ஊழியர்களாக இருக்கவே கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதற்காக வீடுதோறும் ரேஷன் கடை ஊழியர்கள் கலைஞர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை கொடுத்திருந்தனர். அதன்படி 1.63 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1.06 கோடி பேரே தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி அவருடைய பிறந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு ஏடிஎம் கார்டும் வழங்கப்பட்டது. முதல்வருடன் அந்தந்த வங்கிகளின் உயரதிகாரிகளும் இருந்தனர். இந்த தொகை இனி மாதாமாதம் வரவு வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த திட்டத்தில் நிராகரிக்கப்பட்டோர் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி இ சேவை மூலமாக மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிராகரிக்கப்பட 56.60 லட்சம் பேருக்கு காரணங்கள் வரும் 18 ஆம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது எனவும் நிராகரிக்கப்பட்டதன் காரணங்களை அறிந்து கொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!