கனமழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
rain school holiday today in tamil nadu
கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (12.11.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 29ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னதாகவே சில இடங்களில் லேசானது முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு முதல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
🔴LIVE UPDATES
School and Colleges Leave Districts
1. சென்னை
2.திருவள்ளூர்
3.காஞ்சிபுரம்
4.கடலூர்
5.சேலம்
6.திருச்சி
7.கரூர்
8.செங்கல்பட்டு
9.மயிலாடுதுறை
10. திருவாரூர்
11.திருவண்ணாமலை
12.அரியலூர்
13.ராணிப்பேட்டை
14.திண்டுக்கல்
15.விழுப்புரம்
16. வேலூர்
17. நீலகிரி
18.தேனி
19.கோவை
20.பெரம்பலூர்
21. கள்ளக்குறிச்சி
22. தஞ்சாவூர்
23.திருப்பத்தூர்
24.ராமநாதபுரம் (பள்ளிகளுக்கு மட்டும்)
25.புதுக்கோட்டை
26. சிவகங்கை இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
Click here | |
Telegram | Click here |
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி 10-12 தேதிகளில் நகரக்கூடும் என்றும் இதனால் திருவள்ளுவர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நவம்பர் 12-ம் தேதி நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், கோயம்புத்தூர், திருப்பூர், திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.