TN School Leave Rain Districts
தொடர்ந்து மழை
TN School Leave Rain Districts தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடந்த ஒரு வார காலமாகவே மலை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்றும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது

அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை:
அதன்படி, தமிழகத்தின் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை, திருப்பூர், தேனி, மயிலாடுதுறை, நாகை, தென்காசி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமாரி போன்ற 23 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
வரும் 6ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு:
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 6ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது… வால்பாறை வட்டத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், தேனி, தென்காசி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், அந்த மாவட்டங்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு |
|
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் |
|
WhatsApp Group |
Click here |