தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு TN Schools Reopen Good News

‘கோடை வெயில் கொளுத்துவதால் தமிழகம் முழுவதும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த கல்வி ஆண்டுக்கான இறுதி வேலை நாட்கள் ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிந்தது. அதனால் மே 1ம் தேதி முதல் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 2023-24ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பதற்கான நாட்கள் குறித்த விவரங்களை இம்மாத தொடக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார். அதன்படி 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஜூன் 1ம் தேதியும், தொடக்க கல்வியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

கல்வி உபகரணங்கள்

தமிழக பள்ளி மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசு பல நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில் மாணவர்களுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் கல்வி உபகரணங்களை இலவசமாக வழங்க உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த இவர் ” பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு பள்ளி புத்தகங்கள் உடனடியாக கிடைக்க தமிழக அரசு பல ஏற்பாடுகளை செய்துள்ளது.

மேலும் பள்ளிகள் திறந்து ஒரு வாரத்திலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படும். இது மட்டுமல்லாமல் தமிழக முதல்வர் இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு 11 பொருட்கள் அடங்கிய கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்க உள்ளதாகவும், இதற்கான இந்த திட்டம் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

TN Schools Reopen Good News
TN Schools Reopen Good News

கோடை வெயில்:

ஆனால் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில்தான் தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்பார்க்காத அளவிற்கு வெயில் உச்சம் அடைந்து உள்ளது. தினசரி வெப்பநிலை முதல்நாளை விட அதிகமாக உள்ளது.

சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில்

சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

சென்னையில் பகல் நேரங்களில் 43 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை கூட பல இடங்களில் நிலவுகிறது. இந்த நிலையில்தான் வெப்பநிலை குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி கண்டிப்பாக பள்ளி திறப்பை தள்ளி போட வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. (TN Schools Reopen Extended)

இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வித்துறை நிர்வாகிகளுடன் பள்ளி திறப்பு தள்ளி வைப்பது குறித்து ஆலோசனை செய்திருக்கிறார். இதனையடுத்து, பள்ளிகள் திறப்பதற்கு இரண்டு முக்கிய தேதிகளை தேர்வு செய்திருப்பதாகவும் முதல்வரின் அறிவிப்பின்படி அந்த இரண்டு தேதிகளில் ஒரு நாள் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாகவும் அன்பின் மகேஷ் தற்போது அறிவித்திருக்கிறார். மேலும், பள்ளி திறப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் கூடிய விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!