TNPSC Group 4 Result 2022 Important Notification
TNPSC Group 4 Result 2022 Important Notification குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீண்டும் தெரிவித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஜுலை 24ம் தேதி குரூப் 4 தேர்விற்கான எழுத்துத் தேர்வினை நடத்தியது. 7,301 காலிப்பணியிடங்களுக்கான இத்தேர்விற்கு 22 லட்சம் பேர் (22,02,942) விண்ணப்பித்திருந்தனர். 18 லட்சம் பேர் (18,36,535) தேர்வில் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வு நடைபெற்று முடிந்து கிட்டத்தட்ட 7 மாதங்கள் கடந்த நிலையில், இதுநாள் வரை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வர்களும், அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து, குரூப் 4 தேர்வு முடிவுகள் தாமதவாது தொடர்பாக கடந்த மாதம் 14ம் தேதி டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்தது.

அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு:
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மெத்தனம் காட்டி வருவதாகவும், படுதோல்வி அடைந்து விட்டதாகவும் எதிர்கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். குறிப்பாக, பாமக நிறுவனம் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ” குரூப் 4 தேர்வை அறிவித்து, நடத்தி, முடிவுகளை அறிவிப்பதற்கு ஓராண்டை பணியாளர் தேர்வாணையம் எடுத்துக் கொள்வது மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். அவர்களின் உணர்வுகளை தேர்வாணையம் மதிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் குரூப் 4 போன்ற ஓர் அடுக்கு கொண்ட போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி பணி நியமன ஆணை வழங்குவது வரையிலான அனைத்து நடைமுறைகளும் 5 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
மறுபுறம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), குரூப் 4 தேர்வு முடிவுகளை (Group 4 Examination) வேண்டுமென்றே காலதாமதம் செய்வதற்கான காரணம் என்ன? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்
முந்தைய ஆண்டுகளை விட, 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றதாக தெரிவித்தது. மேலும், இம்முறை விடைத்தாள்களின் இருபாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்து பிழைகள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கிட்டத்தட்ட 36 லட்சத்திறகும் கூடுதலாக வினாத்தாட்கள் ஸ்கேன் செய்யப்படுவதாகவும், தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனேயாக வெளியிடக்கோரி தேர்வர்கள் சமூக வலைதளமான ட்விட்டரில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் நேற்று முழுவதும் ட்ரெண்டாகியது. டிஎன்பிஎஸ்சி தொடர்பான மீம்ஸ்களும் இந்த ஹேஷ்டேக்கில் அதிகம் பகிரப்பட்டன.
TNPSC Group 4 Result 2022 Important Notification
TNPSC வெளியிட்டுள்ள செய்தி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி – IV) இல் அடங்கிய பணிகளுக்கான தேர்வினை கடந்த 24.07.2022 அன்று நடத்தியது. இத்தேர்வின் முடிவுகள் குறித்து தேர்வாணையத்தால் 14.02.2023 அன்று வெளியிடப்பட்ட விரிவான செய்திக்குறிப்பில் தெரிவித்ததன்படி தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது.
மேலும், இத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று மீண்டும் தேர்வர்களின் கனிவானதகவலுக்காகத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
click here to download notification
