vinayagar silai vanga nalla neram
விநாயகர் சிலை வாங்க நல்ல நேரம்
விநாயகர் சதுர்த்தி :
தெய்வங்களுக்கு எல்லாம் முதன்மை தெய்வமாக விளங்கக் கூடியவர் விநாயகர். அவருக்குரிய சிறப்பான நாட்களில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. சிவன், சிறுவனாக இருந்த விநாயகரின் தலையை வெட்டி எடுத்தார். பிறகு பார்வதி தேவி கேட்டுக் கொண்டதன் படி, தனது தவறை உணர்ந்து விநாயகருக்கு மீண்டும் உயிர் தர நினைத்தார் சிவ பெருமான். தனது பூதகணங்களை அனுப்பி, நீங்கள் செல்லும் வழியில் முதலில் காணும் உயிரினத்தின் தலையை கொண்டு வரும் உத்தரவிட்டார்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
விநாயகர் சதுர்த்தி 2023 எப்போது ?
சிவனின் உத்தரவின்படி முதலில் கண்ணில் பட்ட யானையின் தலையை கொண்டு வந்தனர் சிவ கணங்கள். யானையின் தலையை கொண்டு, விநாயகரை மீண்டும் உயிர்பெற்ற எழ செய்தார் சிவ பெருமான். இவ்வாறு இரண்டாவது முறையாக விநாயகர் உயிர்பெற்ற நாளையே நாம் விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடுகிறோம். வழக்கமாக ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியில் தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோம். ஆனால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா புரட்டாசி மாதத்தின் முதல் நாளில் வருகிறது. அதிலும் செப்டம்பர் 18 ம் தேதி கொண்டாடுவதா அல்லது செப்டம்பர் 19 ம் தேதி கொண்டாடுவதா என்பதில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

vinayagar silai vanga nalla neram
விநாயகர் சிலை வாங்க நல்ல நேரம் :
செப்டம்பர் 18 ம் தேதி தான் விநாயகர் சதுர்த்தி தினமாக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்கள், காலை 9 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் விநாயகரை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்து விட வேண்டும். செப்டம்பர் 18 ம் தேதி திங்கட்கிழமை என்பதால் காலை 07.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் உள்ளது. அதனால் 9 மணிக்கு மேல் விநாயகர் சிலையை வீட்டிற்கு வாங்கி வருவது நல்லது. விநாயகர் சதுர்த்தி பூஜையை பகல் 12 மணி முதல் 01.30 வரையிலான நேரம் அல்லது மாலை 6 மணிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு நேரம் :
செப்டம்பர் 19 ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்கள், காலை 7 மணி முதல் 08.45 வரையிலான நேரத்தில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் வைத்து விட வேண்டும். அன்றைய தினம் செவ்வாய்கிழமை என்பதால் காலை 9 மணி முதல் 10.30 வரை எமகண்ட நேரம் துவங்கி விடும். அதனால் அதற்கு முன்பாக விநாயகர் சிலையை வீட்டிற்கு கொண்டு வந்து வைத்து விட வேண்டும். காலை 10.30 மணிக்கு மேல் பகல் 12 மணிக்குள்ளான நேரத்திலும், மாலை 6 மணிக்கு மேலும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை செய்யலாம்.
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |