10th & 12th முடித்த மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு பதிவு செய்வதற்கான முக்கிய அறிவிப்பு | Cancelation of Employment registration in Tamilnadu schools

10ஆம் வகுப்பு , பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்களில் வேலைவாய்ப்பை பதிவு செய்யும் நடைமுறை இதுவரை இருந்து வந்தது..10, 12-ம் வகுப்புமுடித்த மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதிகளை படித்த பள்ளிகள் மூலம் நேரடியாக வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வசதி 2011-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இந்த நடைமுறை இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுகிறது இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, வேலைவாய்ப்பு பிரிவு இணையதளத்தின் வாயிலாக 2011-ம் ஆண்டு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் முதல்-அமைச்சரின் செயலாளர் III அவர்களால் 6.6.2022 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்ட முடிவில் தெரிவிக்கப்பட்டபடி நிகழ்நிலையாக வேலைவாய்ப்பு இணையதளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது.

Cancelation of Employment registration in Tamilnadu schools
Cancelation of Employment registration in Tamilnadu schools

Cancelation of Employment registration in Tamilnadu schools

மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை தரும் மனுதாரர்களுக்கு பதிவுகள் மேற்கொண்டு பதிவு அட்டை வழங்கப்பட வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு இணையதளமான www.tnvelaivaaippu.gov.in-ல் நிகழ்நிலையாக அனைவரும் பதிவுகள் மேற்கொள்ளும் வசதி உள்ளதால் அதில் நேரடியாக மாணவர்கள் பதிவுகள் செய்து கொள்ளலாம் என்பதையும் வேலைவாய்ப்பு பதிவுகள், கூடுதல் பதிவுகள் மற்றும் புதுப்பித்தல்களை “இ-சேவை” வாயிலாக செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என்பதால் அவ்வசதியினையும் விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விவரங்களை அனைவரும் அறியச்செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க சார்நிலை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PEN KALVI SCHEME Registration & Last date – Step by step procedure

இதுசார்ந்து ஈரோடு உட்படசில மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலங்கள் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுஉள்ளதாக கூறப்படுகிறது.

அதில்,10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அவரவர் படித்த பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில்வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மேலும், வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnvelaivaaaippu.gov.in) நேரடியாகவோ அல்லது இசேவை மையங்கள் மூலமாகவோ மாணவர்கள் பதிவு செய்யலாம் என்று தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இதனால் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இதுசார்ந்து தெளிவான அறிவிப்பை கல்வித்துறை வெளியிட வேண்டும் எனவும் ஆசிரியர்கள் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

இணையதளத்தில் நேரடியாகவோ அல்லது இசேவை மையங்கள் மூலமாகவோ மாணவர்கள் பதிவு செய்யலாம் என்று தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!