TN EB Electricity charges increase in tamil nadu
தமிழகத்தில் மின் கட்டண உயர்த்தப்படுமா..?
TN EB Electricity charges increase in tamil nadu தமிழ்நாட்டில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின் கட்டணத்தை ஆறு சதவீதம் அல்லது மின் வாரிய பணவீக்கம் 4.7% அளவிற்கு உயர்த்திக் கொள்ளலாம் என மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு அறிவித்தது.
தமிழகத்தில் மீண்டும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு பின்னர் மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின் பெயரில் மின் கட்டணம் 12% முதல் 52% வரை அளவிற்கு உயர்த்தப்பட்டது.

TN EB Electricity charges increase in tamil nadu
ஆலோசனைக் கூட்டங்கள்
இந்த நிலையில் மின்வாரியத்திற்கு 1,65,000 கோடி ரூபாய் கடன் இருந்து வருகிறது. இதனை கட்டுக்குள் வைக்க வேண்டுமென்றால் அடுத்த ஐந்து ஆண்டிற்கு வருடத்திற்கு ஆறு சதவீதம் ஐந்து ஆண்டுகளில் 30 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. அதற்கான ஒப்புதலையும் வழங்கியது. இந்த நிலையில் ஜூன் மாதம் இதற்குரிய ஆலோசனைக் கூட்டங்களை மின்வாரியம் நடத்தி வருகிறது.
குறிப்பாக மின் வாரிய பணவீக்கம் உயர்வின், அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருப்பதால், ஜூலை முதல் கட்டணத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டு ஜூலை மாதம்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |
