Schools Rain Leave June 2023
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் மேலடுக்குகளில் கிழக்கு மேற்கு திசை காற்று காரணமாக, தமிழகத்தில் வருகிற 26-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் இந்திய பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,
22.06.2023 மற்றும் 23.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24.06.2023 முதல் 26.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, அரியலூர், தருமபுரி, பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரியில் 7 மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
பள்ளி மாணவர்கள் முக்கிய அறிவிப்பு
பள்ளி மாணவர்கள் நாளை மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லும் பொது முன் ஏற்பாடு உடன் செல்ல வேண்டும். மேலும் மழை பொழிவின் அளவை பொறுத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் ஆவலில் உள்ளனர்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |