தமிழகத்தில் இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கும் தேதி கடும் வெயில் தாக்கம் காரணமாக இரண்டு முறை மாற்றி அமைக்கப்பட்டது.
மேலும் பள்ளிகள் திறப்பு இருமுறை தள்ளிவைக்கப்பட்டதால் சனிக்கிழமைகளிலும் இயங்குகிறது. இதனால் மாணவர்கள் மிகுவும் சோர்வுடன் காணப்படுகின்றனர்
பள்ளிகள் துவங்கிய உடன் அடுத்த வாரமே மழை காரணமாக இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது.
மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு இயங்குகிறது.
தினமும் பள்ளிக்கு சென்று வீட்டு படங்களை தினமும் செய்து முடித்து, பாடங்களை தொடர்ச்சியாக கவனித்து வரும் மாணவர்களுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வந்தால் பெரும் மகிழ்ச்சி தான்.
ஒரு நாள் விடுமுறை என்றாலும் மாணவர்கள் அதனை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இதனால் மாணவர்கள் எப்போது விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்து உள்ளனர்.
தமிழகத்தில் திருவிழா, பண்டிகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் அரசு அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ் மாதமான ஆடியில் வரும் அமாவாசை வெகு சிறப்பு மிக்கது. இந்த நாளில் மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவார்.
அத்துடன் இந்த அமாவாசை நாளில் தனது முன்னோர்களை வழிபடுவர்.
இதனால் முக்கிய கோவில்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவிலில் ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடும் நிகழ்வு சிறப்பாக நடைபெறும்.
நடப்பு ஆண்டு ஆடி அமாவாசை ஜூலை 17ம் தேதி வரவுள்ளது. இதனை முன்னிட்டு ஜூலை 17ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 22-ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு |
|
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் |
|
WhatsApp Group |
Click here |