அரசு விடுமுறை அறிவிப்பு – தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு TN Govt Holiday August 2023 Info

இந்தியாவில் நடப்பு மாதமான ஆகஸ்ட் மாதத்திற்கான பள்ளி விடுமுறை நாட்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

இந்தியாவில் நடப்பு ஆண்டு கோடை வெப்பம் வழக்கத்தை விட அதிக அளவில் இருந்தது. இத்தகைய சூழலில் மக்கள் வீட்டை விட்டு கூட வெளியே செல்ல முடியாத சூழலுக்கு ஆளாகினர். இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் தாமதமாகவே திறக்கப்பட்டது. தற்போது வகுப்புக வழக்கம் போல நடைபெற்று வருகிறது. தற்போது மாதத்திற்கான விடுமுறை நாட்களை அறிந்து கொள்வோம்.

இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கும் தேதி கடும் வெயில் தாக்கம் காரணமாக இரண்டு முறை மாற்றி அமைக்கப்பட்டது.

மேலும் பள்ளிகள் திறப்பு இருமுறை தள்ளிவைக்கப்பட்டதால் சனிக்கிழமைகளிலும் இயங்குகிறது. இதனால் மாணவர்கள் மிகுவும் சோர்வுடன் காணப்படுகின்றனர்

இதனால் மாணவர்கள் எப்போது விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்து உள்ளனர். அவர்களுக்கு ஒரு நற்செய்தி.

TN Govt Holiday August 2023 Info
TN Govt Holiday August 2023 Info

இந்தியாவின்  76 வது சுதந்திர தினம் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று 15ம் தேதி  பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி நாட்டுப் பற்றை வெளிப்படுத்த உள்ளனர்

இந்நிலையில் ஆகஸ்ட் 15  சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலங்கள் மற்றும் தனியார் நிறுவங்களுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது

பொதுவாக ஏதேனும் பண்டிகை நாட்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக போக்குவரத்து அரசு கூடுதலாக பேருந்துகளை இயக்குவது வழக்கம். அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதனால், விடுமுறையொட்டி சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 1100 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. பொதுவாகவே விடுமுறை காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் இரட்டிப்பு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பயணிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்காக 500 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்காக 400 சிறப்பு பேருந்துகளும், ஆகஸ்ட் 12ஆம் தேதி 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது. எனவே, கூட்ட நெரிசலை தடுப்பதற்காக தற்போதையிலிருந்து முன்பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!