TN School Reopen Educaion Minister Announcement
பள்ளிகள் திறப்பு… கல்வி அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!
TN School Reopen Educaion Minister Announcement தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இரு முறை மாற்றியமைக்கப்பட்டது, இந்நிலையில் பள்ளிகள் திறப்பு ஜூன் 12 ஆம் தேதி (6 முதல் 12 ஆம் வகுப்பு வரை) மற்றும் ஜூன் 14 ஆம் தேதி (1 முதல் 5 ஆம் வகுப்பு வரை)திறக்கப்படவுள்ளது
தற்போது அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 1 முதல் ஐந்தாம் வகுப்புக்கு ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

கோடை விடுமுறை
2022- 23ஆம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 28ஆம் தேதியுடன் முடிந்தன. இந்த மாணவர்களுக்கு பள்ளி அளவில் அந்தந்த மாவட்ட வாரியாகத் தேர்வுகள் நடைபெற்றன. ஏப்ரல் 11ஆம் தேதி தேர்வு தொடங்கி, ஏப்ரல் 28ஆம் தேதி நிறைவு பெற்றது. மாணவர்களுக்கு ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஜூன் மாதம் 1-ம் தேதியும் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஜுன் 5-ம் தேதியும் (இன்று) பள்ளிகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
பள்ளிகள் திறப்பு… கல்வி அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!
இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இப்படி வெயில் சுட்டெரிகும் நிலையில் பள்ளி திறப்பு இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்படு ஜூன் 12-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
- கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |
Latest Government Jobs 2023 – Click here to apply.
