Reasons for TN Tomato Price Increase
Reasons for TN Tomato Price Increase தற்போது தமிழ்நாட்டில் சமையல் கூடங்களில் மிகவும் பாதுகாப்புடன் வைக்கப்பட வேண்டிய பொருளாகவே தக்காளி மாறிவிட்டது, என்றால் மிகையாகாது. அந்த அளவுக்கு தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. கிலோ ரூபாய் நூறிலிருந்து நூற்று முப்பது வரை விற்கப்படுகிறது. இதனால் வீடுகளில் தக்காளி பயன்பாடு குறைந்துள்ளது. அதேபோல் ஓட்டல்களிலும் தக்காளி கொண்டு செய்யப்படும் உணவு வகைகளான தக்காளி சாதம், தக்காளி சட்னி, காரத்தொக்கு உள்ளிட்டவை தவிர்க்கப்பட்டு வருகிறது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
தமிழர்களின் உணவில் புளிப்பு சுவை சேர்க்க புளிக்கு மாற்றாக பயன்படுத்த தொடங்கிய தக்காளி கொஞ்சம்கொஞ்சமாக தமிழ்நாட்டு மக்களின் உணவுக் கூடங்களில் பிரிக்க முடியாத ஒரு பொருளாக மாறிவிட்டது. இதனால், தக்காளி இல்லாமல் சமையல் எப்படி? என்கிற அளவுக்கு உணவில் முக்கிய இடம் பிடித்துவிட்ட தக்காளியின் விலை திடீரென ஏன் இந்த அளவுக்கு உயர்ந்தது? தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டு வர அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? தக்காளி விலை மீண்டும் எப்போது குறையும்?
தக்காளி விலை கடும் உயர்வு
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து சமீப நாட்களில் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் தக்காளியின் விலை விலை ஒரு கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.
“தற்பொழுது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளியினுடைய வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் கடந்த ஆண்டு ஆந்திரா, கர்நாடகா பகுதி விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்காததால் அவர்கள் மாற்று பெயரை செய்ய தொடங்கி விட்டனர். அதன் காரணமாகவே தக்காளி விலை தற்பொழுது உயர்ந்துள்ளது.”
தக்காளி விலை அதிகமானதற்கு காரணம் விளைச்சல் குறைந்தது தான் முக்கிய காரணம். இந்த விலை ஏற்றமானது சிறிது காலம் வரை நிச்சயமாக இருக்கும்.
“இயற்கையின் சீற்றமே காரணம்”
தக்காளி விளைச்சல் அதிகமாக இருக்கும் போது கோயம்பேடு சந்தைக்கு 50 முதல் 80 வண்டிகள் தக்காளியை ஏற்றி வரும். ஆனால் தற்பொழுது விளைச்சல் குறைவு என்பதால் 20-30 வண்டிகள் வரை மட்டுமே வருகின்றன. இயற்கை சீற்றத்தின் காரணமாக, அதிக வெயில் தாக்கத்தின் காரணமாக தக்காளியின் விளைச்சல் ஆந்திரா, கர்நாடகாவில் மிகவும் குறைந்துவிட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு கிலோ ஐந்து ரூபாய் பத்து ரூபாய் என தக்காளி விற்பனை செய்யப்பட்டது. அதை சந்தோஷமாக பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தினார்கள்.
10 நாட்களுக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று தக்காளி விலை உயர்கிறது.அடுத்தாண்டு தக்காளி விலையேற்றம் வராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு |
|
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் |
|
WhatsApp Group |
Click here |