TN Schools Happy News for students
பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – புதிய தகவல்கள்
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதனால் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்” என்று அதிரடியாக அறிவித்தார். இதனால் மாணவர்களின் கோடை விடுமுறை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தற்போது ‘No School bag’ என்ற புதிய திட்டத்தை வரும் கல்வி ஆண்டில் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு மாதத்திலும் உள்ள 4வது சனிக்கிழமையும் பேக் இல்லாமல் பள்ளிக்கு வர வேண்டும். அன்று நாள் முழுவதும், SCERT-ன் வழிகாட்டுதலின்படி கலாச்சார நிகழ்ச்சிகள், விவாதங்கள், வினாடி-வினா, பயிலரங்குகள் மற்றும் பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மாணவர்களை மையமாக வைத்து நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
