தமிழக பள்ளிகளுக்கு கூடுதலாக 10 நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்படுமா?? வெளியான முக்கிய தகவல்!!! TN Schools Reopen Extended

TN Schools Reopen Extended

TN Schools Reopen Extended இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கமானது கடந்த சில ஆண்டுகளை விட அதிகமாக இருந்தது. இதனால், பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த கோடை விடுமுறை முடிந்த பிறகு, தமிழகத்தில் புதிய கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஜூன் 1 ஆம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், ஜூன் 5 ம் தேதியில் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் என முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

‘கோடை வெயில் கொளுத்துவதால் தமிழகம் முழுவதும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த கல்வி ஆண்டுக்கான இறுதி வேலை நாட்கள் ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிந்தது. அதனால் மே 1ம் தேதி முதல் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2023-24ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பதற்கான நாட்கள் குறித்த விவரங்களை இம்மாத தொடக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார். அதன்படி 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஜூன் 1ம் தேதியும், தொடக்க கல்வியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

TN Schools Reopen Extended
TN Schools Reopen Extended

நேற்று முன்தினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் விவாதித்தார். அதில், பள்ளிகள் திறப்பு மற்றும் விடுமுறையை நீட்டிப்பது, வெயிலின் தாக்கம், பாடப்புத்தகங்கள் வினியோகம், பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதில், தமிழ்நாடு முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில், பள்ளிகள் திறக்கும் போதும் வெயில் நீடித்தால் மாணவ, மாணவியருக்கு சிரமம் ஏற்படும் என்றும், பள்ளி திறக்கும் நாளை ஒத்தி வைக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: தமிழக முதல்வர் தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டு வருவதற்காக வௌிநாடு சென்றிருந்தாலும், பள்ளிக் குழந்தைகள் மீது வைத்திருக்கும் அக்கறையை வௌிப்படுத்தும்விதமாக அவர் பள்ளிகள் திறப்பது குறித்து கேட்டறிந்து வருகிறார். பள்ளிகள் திறக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்றும் விசாரித்து வருகிறார். வௌிநாட்டில் இருந்தாலும், நாங்கள் பள்ளி திறப்பதற்கான இரண்டு தேதிகளை குறிப்பிட்டிருந்தோம். வெயிலின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை அறிந்து, முதல்வர் 1ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அனைத்தும் வரும் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பள்ளிக் கல்விதுறை சார்பில் நாங்கள் அறிவிக்கிறோம்.

ஆனால், அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதையடுத்து, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று (மே 26) ஒன்று முதல் 12 வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் புதிய கவ்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஜூன் 7ம் தேதி தொடங்கும் என அறிவித்திருந்தார்.

இந்த கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டதை அடுத்து, மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், பெற்றோர்கள் கோடை வெயிலின் தாக்கத்தால் பல வித அலர்ஜி, வேர்க்குரு உள்ளிட்ட பல வகை நோய்களுக்கு குழந்தைகள் உள்ளாகின்றனர். இதனால், மாணவர்கள் எந்தவித சிரமமுமின்றி புதிய வகுப்புகளுக்கு செல்வார்கள் என சில பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!