magalir urimai thogai rs 1000 scheme
magalir urimai thogai rs 1000 scheme மகளிருக்கான 1,000/- ரூபாய் உரிமை தொகை திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்துள்ளது.
இந்தக் கூட்டம் குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளன பெண்களுக்கு 1,000/- ரூபாய் அறிவிப்பு குறித்து கடன மார்ச் 20ஆம் தேதி நிதி அமைச்சர் அறிவித்தார்.
மகளிர் உரிமைத்தொகை மாதம் 1,000/- ரூபாய் அறிஞர் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும்.
தமிழ்நாட்டில் தகுதியான ஏழை எளிய குடும்பத் தலைவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் 2 கோடிக்கு மேல் குடும்ப அட்டைகள் இருக்கும் போது தமிழக அரசு வெறும் 7000 கோடி ரூபாய் மட்டுமே இதற்கு ஒதுக்கீடு செய்திருப்பதால்.
அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் கிடைக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது.

இதற்கு தமிழக சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன் இப்பொழுது ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
யார் யாருக்கு பலன் அதில் ஏற்கனவே மாதம் 1,000/- உதவித்தொகை பெற்று வரும் வயதான பெண்கள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள், இதில் மறுபடியும் பயன் அடைய மாட்டார்கள்.
வருமான வரி செலுத்தும் பெண்கள் பயனடைய மாட்டார்கள், மத்திய மற்றும் மாநில அரசு பணியில் இருக்கும் பெண்களும் இதில் பயன் அடைய மாட்டார்கள்.
ஆனால் கண்டிப்பாக ஏழை எளிய வறுமை கோட்டிற்கு கீழ் மற்றும் வீடுகள் இல்லாத நடுத்தர குடும்பப் பெண்கள் நிச்சயம் ரூபாய் 1,000/- உரிமைத் தொகையை பெறுவார்கள் என கூறியிருக்கிறார்
எனவே இந்த பணம் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிக்கு சென்றடையும் வகையில் விதிமுறைகளும் வகுக்கப்படுகிறது.
அதனால்தான் நேற்று முன்தினம் இதற்கான ஆலோசனை கூட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் நடத்தி இருந்தார்.
ரேஷன் கார்டுகள் அடிப்படையில் குடும்பத் தலைவிகள் தேர்வு செய்வது அதில் அவர்களது ஆண்டு வருமானத்தை ஒப்பிட்டு பார்ப்பது.
வயது வரம்பு நிர்ணயிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நிபந்தனைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
புதிய நெறிமுறைகள் என்ன
அந்த நெறிமுறைகள் வந்த பிறகுதான் ரூ. 1000/- பெறுவதற்கான விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது அந்த மனுக்களை பரிசீலனை செய்து தகுதியான மகளிர் ரூ. 1000/- பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
மொத்தத்தில் தகுதியானவர்கள் யார் என்பதை வைத்து ரேஷன் கார்டை அடிப்படையாக வைத்து பணம் வழங்கப்படும் என தெரிகிறது.
குடும்பத் தலைவிகளின் வயதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது,அதாவது 30 வயதிற்கு மேற்பட்ட குடும்ப தலைவிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என தெரிகிறது.
அதேபோல் வருமான வரி செலுத்தாதவர்கள் என்ற கண்டிஷன் முக்கியமாக இடம் பெறும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் சொந்த நிலம் இருக்கிறதா என்பதிலும் கணக்கில் கொல்லப்படுமாம்.
வரும் செப்டம்பர் 15 இல் உரிமைத்தொகை கொடுக்க முதல்வர் முடிவு செய்துள்ளார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளதால் வழிகாட்டு விரைவில் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஏழை, எளிய, வறுமை கோட்டிற்கு, கீழ் இருக்கும் பெண்கள் நிச்சயம் இதில் பயன்பெற வேண்டும் என அரசு உறுதியாக இருக்கிறது.
அதனால் மிக சரியான நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என முதலமைச்சர் கண்டிப்புடன் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளதால் இதற்கான பணிகள் மறைமுகமாக மிக வேகமாக நடந்து வருகிறது.
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |