குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வெளியான புதிய தகவல்கள் Kudumba Thalaivi Rs 1000 Latest News

Kudumba Thalaivi Rs 1000 Latest News

Kudumba Thalaivi Rs 1000 Latest News பெண்களுக்கு 1000 ரூபாய் அறிவிப்பு குறித்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நிதியமைச்சர் அறிவித்தார்.. மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பும் வெளியிட்டிருந்தது..

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

ஜூன் 3ம் தேதி

அந்தவகையில், 1000 உரிமை தொகை வழங்குவதற்கான திட்டம் வரும் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கும் நிலையில், ஜூன் 3ம் தேதி (நாளை) மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் அன்று இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். பிறகு, செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வரப்போகிறது என்றும் சொல்கிறார்கள

1000 ரூபாய் உரிமைத்தொகை யார் யாருக்கு வழங்கப்படும் என்று அரசு தரப்பில் பலமுறை விளக்கங்கள் தரப்பட்டுவிட்டன.. எனினும், யாருக்கெல்லாம் கிடைக்கும், கிடைக்காது என்பது குறித்த சில தகவல்கள் அவ்வப்போது கசிந்தபடியே உள்ளன.

Kudumba Thalaivi Rs 1000 Latest News
Kudumba Thalaivi Rs 1000 Latest News

யாருக்கு கிடைக்கும்:

நிபந்தனைகள் அடிப்படையில் தகுதியுடையோர்களுக்கு மட்டுமே ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்கும் என்று கூறப்பட்டு வருகின்றன.. அதன்படி, PHH என்ற வறுமைக் கோட்டுக்குக்குகீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோஅரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்கும் என்கிறார்கள்.. அதேநேரத்தில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானமும் கணக்கிடப்பட்டு இந்த பயனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் 1 கோடி மகளிருக்கு மாதம், 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம், வரும் செப்டம்பர் முதல் செயல்படுத்தப்பட உள்ளது.. இதற்கு தகுதியான பயனாளிகள் தேர்வுகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், இதனிடையே, இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது

ரேஷன் கடைகளில்

மகளிர் உரிமை தொகையை, மாநில தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில், ரேஷன் கடைகளில், மைக்ரோ ஏ.டி.எம்., கருவிகள் வாயிலாக பட்டுவாடா செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, கூட்டுறவு வங்கி கணக்கில் மட்டும், உரிமை தொகை செலுத்தப்படும். அதன் ஊழியர்கள், ‘மைக்ரோ’ ஏ.டி.எம்., எனப்படும் கையடக்க கருவி மற்றும் பண பெட்டகத்துடன். ரேஷன் கடைக்கு மாதம்தோறும் செல்வார்.

அந்த கருவியில் பயனாளிகளின், ‘ஆதார்’ எண் உள்ளிட்ட விபரங்கள், ஏற்கனவே பதிவாகி இருக்கும். அவர்கள் விரல் ரேகை பதிவு செய்து அல்லது, ‘டெபிட் கார்டு’ பயன்படுத்தி பணத்தை பெறலாம். இதை செயல்படுத்துவது தொடர்பாக, கூட்டுறவு துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!